#004. மனிதரும், தேவரும்

#4. என் மதியில் எழுந்தருள்வாய்.

மனிதரும், தேவரும், மாயாமுனிவரும் வந்து, சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றைவார் சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும், பகீரதியும், படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே .

மனிதர்களும், தேவர்களும், சாகாத வரம் பெற்ற முனிவர்களும் வந்து சிரம் தாழ்த்தி வணங்கும் சிவந்த திரு அடிகள் வாய்ந்த மெல்லியலாளே! கொன்றை மலர் சூடிய சடையின் மேல், இளம் பிறையையும், பாம்பையும், கங்கையையும் ஏந்தி அருளும் தூயவரான எந்தை சிவபிரானும் நீயும் என் அறிவுடன் எந்நாளும் மாறாது இணைந்து இருக்க வேண்டுகின்றேன்.