#011. ஆனந்தமாய் என்

11. திருவடிப் பெருமை.

ஆனந்தமாய், என் அறிவாய், நிறைந்த அமுதமாய்
வான் அந்தமான வடிவுடையாள், மறை நான்கினுக்கும்
தான் அந்தமான சரணாரவிந்தம் தவளநிறக்
கானம் தம் ஆடரங்கு ஆம் எம்பிரான் முடி கண்ணியதே.

வானம் ஈறான ஐம்பெரும் பூதங்களின் வடிவு ஆனவள்; அவள் திருவடித் தாமரைகள் ஆனந்தமாகவும், அறிவாகவும், அமுதமாகவும், நான்மறைகளின் முடிவாகவும் உள்ளன. சுடலையைத் தம் ஆடல் அரங்காகக் கொண்ட இறைவனின் தலை மீது அவை மாலையாகவும் விளங்குகின்றன.