#040. வாணுதல் கண்ணியை

# 40. புண்ணியம் அன்றோ?

வாணுதல் கண்ணியை, விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியை, பேதை நெஞ்சில்
காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை, காணும் அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணம் அன்றோ முன்செய் புண்ணியமே?

ஒளி பெருந்திய நெற்றிக்கண்ணை உடையவளை; விண்ணோர்கள் வந்து வணங்க எண்ணும் எம்பெருமாட்டியை; அறியாமை நிறைந்த உள்ளத்தினால் காண இயலாத கன்னியை; கண்டு போற்ற வேண்டும் என பக்தி செய்ய எண்ணிய எண்ணம், நான் முற்பிறவிகளில் செய்த புண்ணியத்தின் பயனால் அல்லவா?