தேவியின் உறுதி மொழி (27)

# 55.

ததா3ததா3வதீர்யாஹம் கரிஷ்யாம்யரி ஸம்க்ஷயம் || ஓம் ||

அப்போது உலக மக்கள் எல்லோரும் எங்கும் என்னை ‘ப்ராமரீ’ என்ற பெயரில் துதிக்கப் போகின்றார்கள். இவ்வாறு எப்போதெல்லாம் தானவர்களின் வளர்ச்சியும், நல்லவர்களின் தளர்ச்சியும் ஏற்படுகின்றதோ, அப்போதெல்லாம் நான் அவதரித்து சத்ருக்களை நாசம் செய்வேன்.

ஓம் ஜெய ஜெய ஸ்ரீ மார்கண்ட3புராணே ஸாவர்ணிகே மன்வன்தரே
தே3விமாஹாத்ம்யே ஏகாத3சோ’த்3யாய:

ஓம் ஜெய ஜெய ஸ்ரீ மார்கண்டேய புராணத்தில் ஸாவர்ணிக மன்வந்தரத்தில் உள்ள தேவி மஹாத்மியத்தில் பதினோராவது அத்தியாயம் முற்றிற்று.

அன்னையின் புகழ் வாழ்க! அன்னையின் புகழ் வளர்க!
அன்னையின் அருள் அனைவருக்கும் நல்லறிவையும்,
நல்ல வாழ்க்கை நெறியையும், நீண்ட ஆயுளையும் தருக!

Leave a comment