#078. செப்பும் கனகக் கலசம்

# 78. பதித்துக் கொண்டேன்.

செப்பும் கனகக் கலசம் போலும், திருமுலைமேல்
அப்பும் களப அபிராமவல்லி, அணிதரளக்
கொப்பும் வயிரக்குழையும், விழியின் கொழுங்கடையும்,
துப்பும் நிலவும் எழுதிவைத்தேன், என் துணைவிழிக்கே.

பொற்கலசங்கள் என்று சொல்லத்தகுந்த அழகிய ஸ்தனங்களின் மேல் நறுமணம் கமழும் சந்தனம் பூசியுள்ள அபிராமவல்லி அணியும் முத்துக்கொப்பு, வைரத்தோடு, கடைக் கண்கள், பவழ இதழ்கள், நிலவொளி போன்ற புன்முறுவல் ஆகியவற்றை என் இரு கண்களில் நான் பதிவு செய்து கொண்டுள்ளேன்.