தேவியின் உறுதி மொழி (14)

# 25.

ஏதத்தே வத3னம் ஸௌம்யம் லோச்சனத்ரய பூ4ஷிதம் |
பாது ந: ஸர்வ பீ4திப்4ய: காத்யாயனி நமோஸ்துதே ||

அழகு மிகுந்து விளங்குவதும், மூன்று கண்களால் அலங்கரிக்கப் பட்டதும் ஆன உன்னுடைய முகம் எங்களை எல்லா பயங்களில் இருந்தும் காக்க வேண்டும். காத்யாயனீ! உனக்கு நமஸ்காரம்.

# 26

ஜ்வாலா கரால மத்யுக்3ர மசேஷாஸுர ஸூத3னம் |
த்ரிசூ’லம் பாது நோ பீ4தே பத்3ரகாலி நமோஸ்துதே ||

பயங்கரமான சுவாலை வீசுவதும், மிகுந்த கூர்மை உடையதும்,
அசுரர்களை மொத்தமாக அழிக்கும் உன்னுடைய த்ரிசூலம் எங்களை பயத்திலிருந்து காக்க வேண்டும். பத்ரகாளியே! உனக்கு நமஸ்காரம்.

Leave a comment